• Amãna Bank PLC Blog Detail - Main Visual

அமானா வங்கியின் சுய வங்கிச் சேவை நிலையம் கெக்கிராவயில் திறப்பு

அமானா வங்கி April 29, 2024

அமானா வங்கி தனது புதிய சுய வங்கிச் சேவை நிலையமொன்றை (SBC) கெ்கிவராவயில் திறந்துள்ளது. இலங்கை முழுவதிலும் வாடிக்கையாளர்களுக்கு வங்கிச் சேவைகளை இலகுவாக அணுகக்கூடிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான அர்ப்பணிப்பின் வெளிப்பாடாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. இல. 15, ECD ஆர்கேட், தலாவ வீதி, கெக்கிராவ எனும் முகவரியில் இந்த புதிய சுய வங்கிச் சேவை நிலையம் அமைந்துள்ளது. அமானா வங்கியின் 62ஆவது வாடிக்கையாளர் அமைவிடப்பகுதியாக இது காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அமானா வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி இம்தியாஸ் இக்பால், நுகர்வோர் வங்கியியல் மற்றும் சந்தைப்படுத்தல் உப தலைவர் சித்தீக் அக்பர், அனுராதபுர கிளை முகாமையாளர் சாந்த பெர்னான்டோ ஆகியோருடன், பிரதேசத்தின் வியாபார பிரதிநிதிகள், அரசாங்க அதிகாரத் தரப்பினர் மற்றும் பிரதேசவாசிகள் என பலரும் இந்த நிலையத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். கெக்கிராவ சுய வங்கிச் சேவை நிலையம் 24/7 நேரமும் பண மீளப்பெறுகை, பண வைப்பு மற்றும் காசோலை வைப்பு வசதியை வழங்கும்.

இந்த விரிவாக்கம் தொடர்பில் பிரதம செயற்பாட்டு அதிகாரி இம்தியாஸ் இக்பால் கருத்துத் தெரிவிக்கையில், “சுய வங்கிச் சேவை நிலையமொன்றை நிறுவியுள்ளதனூடாக கெக்கிராவ பகுதிக்கு எமது சேவையை நாம் விஸ்தரித்துள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம். அதனூடாக, அனைவருக்கும் சௌகரியமான வங்கியியல் தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கான எமது அர்ப்பணிப்பை மேலும் உறுதி செய்துள்ளோம். சமூகங்களுக்கு சௌகரியம் மற்றும் மக்களுக்கு நட்பான நிதிச் சேவைகள் ஆகியவற்றை பெற்றுக் கொடுத்து வலுவூட்டுவது எனும் எமது நோக்கத்துக்கமைய இந்தத் திட்டம் அமைந்துள்ளது.” என்றார்.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டிருந்ததுடன், 2023 ஆம் ஆண்டில் 37ஆம் ஸ்தானத்தில் ஏசியன் பாங்கர் தரப்படுத்தி கௌரவித்துள்ளது.

அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.

படத்தின் தலைப்பு:கெக்கிராவ சுய வங்கிச் சேவை நிலையத்தை அமானா வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி இம்தியாஸ் இக்பால் திறந்து வைப்பதையும், EDC ஆர்கேட் முகாமைத்துவ பணிப்பாளினி நிரோஷா தர்மசேன மற்றும் கெக்கிராவ பிரதேச செயலாளர் கே.எம்.ஐ.டி. கனகரட்ன ஆகியோர் அருகில் காணப்படுவதையும் காணலாம்.
கெக்கிராவ சுய வங்கிச் சேவை நிலையத்தை வாடிக்கையாளர் ஒருவர் பயன்படுத்துகின்றார்.

Featured

My Hajj
2026
விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp
govpay